பொய்களா இவைகள்
“சௌக்கியமா”
“நான் சௌக்கியந்தான்”
“பரீட்சை நல்லாத்தான் செஞ்சிருக்கேன்”
“நம் காதலுக்கு முன் எதுவும் பெரிதில்லை”
“மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு”
“எனக்கு ரொம்ப இளகிய மனசு”
“பணம் பெரிதில்லை”
“நான் பொய் சொல்வதில்லை”
“உன்னை எப்போதோ மறந்து விட்டேன்”
“ஓ இப்போதுதான் ஞாபகம் வருகிறது”
“சொந்தங்கள் சுகமானவை”
“வயதாவது ஒன்றும் வருந்தத் தக்கதில்லை”
“மரணத்தைக் கண்டு பயமொன்றுமில்லை”
வாழ்க்கையில் இப்படி
அவ்வப்போது என்னால் சொல்லப்பட்ட
முழுக்க நிஜமில்லாத
இது போன்ற கொஞ்சம் வார்த்தைகள்
பொய்களில் சேருமா